தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

திங்கள், 10 மே, 2021

பனிரெண்டா? பன்னிரெண்டா? பன்னிரண்டா? | 'Tamil' the meaningful combination

 


பனிரெண்டா? பன்னிரெண்டா? பன்னிரண்டா?

    தமிழ்ச் சொற்கள் பிரித்தாலும் சேர்த்தாலும் பொருள் தருபவை. காரண, காரியத்துடன் புணரும் (சேரும்) அருமையான மொழி. தமிழ்மொழி.

    செவ்வாய் + கிழமை - செவ்வாய்க்கிழமை, செவ்வாய் - செம்மை+வாய்,

அமெரிக்க நாடு 'செவ்வாய்' என்னும் 'மார்ஸ்' கிரகத்துக்குச் சென்று அக்கிரகத்தின் நிறத்தை 1997 ஆம் ஆண்டுகளில்தான் 'செம்மை' எனக் கண்டுபிடித்தது.

    இதனை, ஈராயிரம் ஆண்டுகளுக்கு  முன்னரே தமிழர்கள் 'செவ்வாய்' என நிறத்தைக் குறித்து கோளுக்குப் பெயரிட்டனர். தமிழர்கள் வானை அளந்த பெருமையும், கோளை அளந்த பெருமையும் என்னென்பது?

    பிரித்தாலும் சேர்த்தாலும் பொருள் மாறாமல் சொற்கள் அமையவேண்டுமெனில் எத்தனை மொழி வளம் இருக்கவேண்டும்.  'தண்ணீர் (தண்மை +நீர் - குளிர்ந்த நீர்) கொடுங்கள்' என ஒரு சொல்லிலேயே இருபொருளை உள்ளடக்கிக் கேட்கும் அழகும் அழகுதானே?

 உலகில் உள்ள அனைத்து மனிதர்களிடம் அழகானவர் யார்? என்று கேட்டுப்பாருங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடை கூறுவர். எந்த விடை கூறினாலும் விருப்பும் மறுப்பும் இருக்கு.  ஆனால்' அம்மா' என்ற விடைக்கு  மறுப்பே இருக்காதுதானே.

அம் +மா- அழகு + பெரியது. - 'அம்' என்பது அழகினையும் 'மா' என்பது பெரியது என்னும் பொருளையும் குறிக்கும். அழகில் சிறந்தவள் 'அம்மா' எனத் தமிழ் குறிப்பிடுவது எத்தனை அழகு. அதற்குப் பின் தோன்றிய மொழிகள் அனைத்திலும் இச்சாயல் இல்லாமல் இருக்கிறதா? ஆய்வு செய்து பாருங்கள். தமிழின் அருமை புரியும். உமக்கு உயிர் கொடுக்க உம்முடைய தாய் தன் உயிரைப் பணயம் வைத்தவராயிற்றே. ஒரு  குழந்தை பிற்ககும் போது ஒரு தாயும் பிறக்கிறாள் என்பது எத்தனை உண்மை. 

 பன்னிரண்டைப் பற்றி கூறுவதாகத்தானே தலைப்பு என்கிறீர்களா? 

'ரெண்டு' என்பது தமிழில் மொழி முதலாகாது. எனவே 'பன்னிரெண்டோ', 'பனிரெண்டோ'? வராது.

எனவே 'பன்னிரண்டு' என்பதே சரி. எப்படி என்கிறீர்களா?

    பத்து + இரண்டு  - பத்தில் உள்ள 'து' கெடும் - பத்+ இரண்டு என்றாகும்.

அடுத்து 'த்'  'ன்' ஆக மாறும் - பன்+ இரண்டு என்றாகும்.

தனிக்குற்றெழுத்து முன் ஒற்று வந்தால் இரட்டும் எனற விதிப்படி

பன்ன் + இரண்டும் - பன்னிரண்டு எனப் புணரும். சொல்வதற்கு என்ன அழகாக இருக்கிறது. வேறு எப்படி மாற்றினாலும் இந்த அழகு வரவே வராது.

    மனிதனுடைய ஏதாவது ஒரு  உறுப்பை  மாற்றி வைக்கும் ஆற்றல் உங்களுக்குக்கொடுத்தால் எந்த உறுப்பை  மாற்றுவீர்கள். பெரும்பாலானோர் சொல்வது 'ஒரு கண்ணை தலைக்குப் பின்னால் வைத்துவிடுவேன். இரண்டு பக்கமும் பார்க்கலாம் என்பார்கள்.  இரண்டு கண்களும் ஒரே பொருளைப் பார்க்கும் ஆற்றலிருந்தே பல விபத்துகள். வேறு வேறு பக்கம் பார்த்தால் என்ன ஆகும்? கற்பனை செய்து பார்க்காதீர்கள். கொடுமையாகத்தான் இருக்கும்

அப்படித்தான் தமிழை ஆய்ந்து ஆய்ந்து சொற்களை ஆக்கி இருக்கிறார்கள்.

சுவைத்து மகிழ்வோமே. 



1 கருத்து: