தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

ஞாயிறு, 28 ஜூலை, 2019

ஆணுக்கும் ஒன்பது பருவங்கள் - Nine Stages of Man

ஆணுக்கும் ஒன்பது பருவங்கள் - Nine Stages of Man
தமிழ் வளமுடைய மொழி என்பதற்குப் பழமை, வளமை, செம்மை, தனிமை எனப்பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று ஒரு பொருளுக்குப் பல சொற்கள் அமைந்துள்ளதேபெண்களைப் பூக்களோடு ஒப்பிட்டு இரண்டிற்கும் ஏழு பருவம் எனக் குறிப்பிடுவர்.
அரும்புமுன் இதழ்கள் குவிந்து சிறிதாக அரும்பும் நிலை, மொட்டுமுன் இதழ்கள் குவிந்து மொக்கு விடும் நிலைமுகைமலர்வதற்கு முகிழ்க்கும் (தோன்றும்) நிலை, மலர்மலர்ந்த நிலை , அலர்- மலர்ந்து (மலர் அல்லாத) விரிந்த மலர்வீவீழ்கின்ற நிலை , செம்மல்விடுதலைக்கு பக்குவப்பட்ட நிலை.
பேதை – 5-8 வயது, பெதும்பை – 9 -10 வயது, மங்கை – 11- 14 வயது, மடந்தை – 15 -18 வயது, அரிவை – 19 – 24 வயது, தெரிவை – 25-29 வயது, பேரிளம்பெண் – 30 – 36 வயது,
அரும்பு பேதைக்கும், மொட்டு பெதும்பைக்கும், முகை மங்கைக்கும், மலர் மடந்தைக்கும், அலர் அரிவைக்கும், வீ தெரிவைக்கும், செம்மல் பேரிளம்பெண்ணுக்கும் ஒப்பிட்டுக் காட்டுவர்.
பெண்களுக்கு மட்டும்தான் பருவங்கள் வரையறுக்கப்பட்டுள்ளதா ? ஆணுக்கு இல்லையா எனக் கேட்கிறீர்களா ? தமிழில் எது இல்லை. ஆணுக்கும் பருவங்கள் உண்டு.
பாலன் – 1- 7 வயது, மீளி – 8-10 வயது, மறவோன் – 11-14 வயது, திறவோன் – 15 வயது, காளை – 16 வயது, விடலை -17 – 30 வயது, முதுமகன் – 30 வயதுக்கு மேல் என அகராதி குறிப்பிடுகிறது.
ஆண்,பெண்ணுக்கான ஏழு பருவத்தை,
ஆடவர் காளைய ராடூஉ மகன்மைந்த னாளன்பூம
னீடு குமரனு மாண்பெயர் பேதை நிகர்பெதும்பை
தேடிய மங்கை மடந்தை யரிவை தெரிவையுடன்
கூடிய பேரிளம் பெண்ணேழ் பருவஞ்செய் கோதையரே
என திருவேங்கடபாரதியாரின் நிகண்டு நூலானபாரத தீபத்தின்பதினெட்டாம் பாடல் குறிப்பிடுகிறது. ஆடவர், காளையர், ஆடூ, மகன், மைந்தன், பூமன், குமரன் என ஆணுக்கும், பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் எனப் பெண்ணுக்கும் வரையறுத்துள்ளதைக் காணலாம்.

***********

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக